நாவீரமாய்,
விலக்கவோ
இழக்கவோ முடியவில்லை
நினைவுகளை .............
கள்,கள்ளகசிப்பு ௬ட தந்ததில்லை
வெடித்தெழும் போதை _உன்
விழி மடிக்கையில்
விழுதுப்பாலாய்
ஒட்டிவிட்டது
வெண்சிரிப்பு _இனி
அழுது முடியுமோவென்
பிழைப்பு
தயாராக,
ஊர்வலம் பிந்துகிறது .
அட நான் இன்னும்
சாகவில்லையே ............!
வத்தாக்கிணற்றடியில்
முத்தாதகொவ்வை பளபளப்பு,
பாவற்காய் மினுமினுப்பு,
என்னவோ செய்யுது,
சரம் தூக்கி நடப்பது
றோட்டில் நாயை
துரத்தி ஓடி மகிழ்வது _என்
மட்டுமிருந்த எனை
தாடி சொறிந்து வானம்
பார்க்க வைத்த கொடுமை
காத்தடிக்க நீவர
சைக்கிள் கடையிலிருந்த
எனக்கல்லவா வேர்த்தது ?
எப்பவோ எப்படியோ பார்த்த
உன்னறையில் விளக்கெரிந்தால்
கல்லெறி வேண்டும் பக்கத்துவீட்டான்
செய்த பழிதான் என்ன ?
சைக்கிள் கடையிலிருந்த
எனக்கல்லவா வேர்த்தது ?
எப்பவோ எப்படியோ பார்த்த
கால்முடிகள் ,
இப்பவும் அப்படியே
நிறைந்திருக்கின்றன .......
உன்னறையில் விளக்கெரிந்தால்
கல்லெறி வேண்டும் பக்கத்துவீட்டான்
செய்த பழிதான் என்ன ?
ஐயருக்கு சில்லறை
வைரவருக்கு வடை
எனக்கு நீ
கோவிலில் வேறென்ன ?
திரும்பி பார்த்த நீ
விரும்பி பார்க்கவில்லை
திரும்பி பார்த்ததே
கரும்பாய் இனிக்க தவறவில்லை!
எல்லோருக்கும் எல்லாமும்
கிடைத்திருந்தால்
எனக்கும் நீ கிடைத்திருப்பாய்