Monday 29 April 2013

தப்பாய்யா இது................!!!


             விரும்பினா படியுங்கோ இல்லாடிலும் தயவு செய்து  படியுங்கோ, நீங்கள் எப்படியும் படிப்பியள் என்று  தெரியும். ஒ, படிக்க தொடங்கியிட்டியள் என்ன, இனி உடன விசயத்துக்கு போகத்தான் வேணும்.

            அது ஒண்டுமில்ல  இண்டைக்கு  ஒரு இடத்தில கொஞ்சம் புத்திமதி சொல்லிச்சினம் அதை கேட்ட நேரத்தில இருந்து கையும் ஒடலை காலும் ஓடலை, எதுக்கு அவர் அப்படி அறிவுரை சொன்னார் என்று தலையை போட்டு உடைக்காதையுங்க போற போக்கில கட்டாயம் சொல்லித்தான் போவன்.

Tuesday 23 April 2013

அன்பில் இழைதல்

ஓசையை
தொலைத்த சொல்லொன்று
தளர்ந்து விழுந்தது காலடியில் .......

மெல்லிய
காற்றில் எழும் சிறகொன்றின்
வலி சுமந்து விழுந்திருக்குமோ?

கிளைகளும்
வேர்களும் வெறுத்த மலரொன்றின்
ஏக்கம் தாங்கி விழுந்திருக்குமோ?

பசியோடு
வலையில் இறந்துபோன  சிலந்தியின்
கோபம் சுமந்து விழுந்திருக்குமோ?

தேடத்தொடங்கினேன்

கனத்த
மௌனசெதில்களின் பின்
பிரியமொன்று விட்டுச்சென்ற
ஈரலிப்பில் மூழ்கிக்கிடந்தது
ஓசையற்று,

என்
இமையோரங்களில்
பிரியத்தின் படிமங்கள்

தின்னதொடங்கியது
ஓசை கலந்த அந்த சொல்
கொஞ்சம் கொஞ்சமாக என்னையும்.

Monday 8 April 2013

நாள் கடந்து விட்டது............

இந்த நாள்
கடந்து விட்டது............

சப்தங்களாலும் விரகங்களாலும்
நம்பிக்கைகளாலும் துரோகங்களாலும்
நிரவிக்கிடந்த,
நாளொன்றாய் கழிந்து விட்டது
இலகுவாக........

சாவுக்குப்பின்னான
விமர்சனங்கள்
மென்மையானவை தான்.
நாளொன்றின் மீதும் கூட,

இழந்துவிட்டதாகவும் 
பெருமைப்பட்டதாகவும்
நாளொன்றின் மீதான
மீளாய்வுகள் மட்டும் தொடரும்
கடந்துவிடாமல்......

கல்லறைகளை
போற்றுவதும் வழிபடுவதும்
வழக்கான வம்சத்தில்_இந்த
நாள்களின் சமாதிமீது
நினைவுமலர்கள்
விழுந்துகொண்டே இருக்கும்

மாயமான் வேட்டையில்
வேட்டையாடப்படும் வேடர்களின்
பெருமூசுக்களும்
ஊனக்குரல்களும்
விடை கொடுக்கின்றன......

பரிணாமத்தின் பழமைகளை
கழுவிக்கொண்டு தொலையும்
இந்த  நாளொன்றில்,

என் குறியிடப்பட்ட
பொழுதொன்றை தின்று
வளர்ந்துகொண்டிக்கிறது
அந்திமத்தை நோக்கி
 எனக்கான காலம்.

இந்த நாள்
இனிவரப்போவதுமில்லை.....................