Monday 8 April 2013

நாள் கடந்து விட்டது............

இந்த நாள்
கடந்து விட்டது............

சப்தங்களாலும் விரகங்களாலும்
நம்பிக்கைகளாலும் துரோகங்களாலும்
நிரவிக்கிடந்த,
நாளொன்றாய் கழிந்து விட்டது
இலகுவாக........

சாவுக்குப்பின்னான
விமர்சனங்கள்
மென்மையானவை தான்.
நாளொன்றின் மீதும் கூட,

இழந்துவிட்டதாகவும் 
பெருமைப்பட்டதாகவும்
நாளொன்றின் மீதான
மீளாய்வுகள் மட்டும் தொடரும்
கடந்துவிடாமல்......

கல்லறைகளை
போற்றுவதும் வழிபடுவதும்
வழக்கான வம்சத்தில்_இந்த
நாள்களின் சமாதிமீது
நினைவுமலர்கள்
விழுந்துகொண்டே இருக்கும்

மாயமான் வேட்டையில்
வேட்டையாடப்படும் வேடர்களின்
பெருமூசுக்களும்
ஊனக்குரல்களும்
விடை கொடுக்கின்றன......

பரிணாமத்தின் பழமைகளை
கழுவிக்கொண்டு தொலையும்
இந்த  நாளொன்றில்,

என் குறியிடப்பட்ட
பொழுதொன்றை தின்று
வளர்ந்துகொண்டிக்கிறது
அந்திமத்தை நோக்கி
 எனக்கான காலம்.

இந்த நாள்
இனிவரப்போவதுமில்லை.....................

5 comments:

  1. அப்படித்தான் பலருக்கும் நாள் கழிகிறது... மாறுவது அவரவர் கையில் (மனதில்...)

    ReplyDelete
  2. என் குறியிடப்பட்ட
    பொழுதொன்றை தின்று
    வளர்ந்துகொண்டிக்கிறது
    அந்திமத்தை நோக்கி
    எனக்கான காலம்.

    இந்த நாள்
    இனிவரப்போவதுமில்லை.//


    மனம் கவர்ந்த அருமையான வரிகள்
    ஆழமான சிந்தனையுடன் கூடிய அழகான கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. முடிந்ததை விடுத்து புதியதை எதிர்கொள்ளலாமே??

    ReplyDelete
  4. //இந்த நாள் இனி வரப்போவதில்லை//

    இதுதான் படைப்பின் ரகசியம்.

    அரிய சிந்தனை! அருமையான கவிதை!!

    பாராட்டுகள்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே!
    இன்று வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்.

    இங்கு படைத்துள்ள கவிதையும் அருமை! சிறந்த சிந்தனை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete