"உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல
தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாறவேண்டும் "--பெரியார்
தனித்தனிக் குழுமங்களாக அலைந்து
திரிந்த ஆதிமனிதன் ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம், நவீனம் என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும்
புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு
என்று உதிரிகளாகப்
பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல.
அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை.
அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்க்கொலையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, அது சாமி சடங்கு என்று அங்கீகாரம்
வழங்கிவிடமுடியாது, எனவே
நாங்கள் எந்தச் சாமியின்
பக்கமும் நிற்கமுடியாது.