Tuesday 29 May 2012

உங்களைப்போல


நிறைகுடம்தான் நான்
விரக்திகளால் மட்டும் தான்
நிறைந்திருக்கிறேன் .
ஒளிர்விடும் சுடர்நான்
காலடி எங்கும் தனிமை
இருளை சுமந்திருக்கிறேன் .
நடுவூரில் பழுத்த
நல்ல மரம் நான்
வேர்கள் இன்னும் எனை தேடிக்கொண்டு ....
மாவிலை தோரணங்கள் சூடி
சந்தன வாசம் பூசி
பூரனப்பட்டவனாய் நிற்க
முயலவில்லை நான்
உங்களைப்போல்..........................

கண்ணாடிகள் அலங்கரிக்கப்படுவதால் _முக

கறைகள்என்றும் மறைவதில்லை .


நிழல்களை எடைபோட்டு
நிரப்பிக்கொள்ளவும்
கனவுகளை கருவாய் சுமந்து திரியவும்
ஏக்கதொப்பைகளை
ஏற்றிக்கொண்டு நிற்கவும்
சம்மதித்ததில்லை _என்
மனசாம்ராட்சியம்
உங்களை போல்....................

அரிதாரம் பூசி முகத்தை மறைத்தாலும்

முகவரிகள் மறைவதில்லை .



நிறைகளைத்தேடி ஓடுவதால்
குறைகளோடு வந்திருப்பது
நியமாகிறது .
குறைகளிலிருந்து குறைகளே
கிடைக்குமாகையால் _எந்த
எச்ச அடையாளங்களையும்
விடப்போவதில்லை
உங்களைப்போல்.........







ஒன்றுமில்லாமல் அவதரித்தவன் _எதற்காக
என்றும் வாழும் நினைவுகளை விதைக்கவேண்டும்

1 comment:

  1. நிறைகுடம்தான் நான்
    விரக்திகளால் மட்டும் தான்
    நிறைந்திருக்கிறேன் .
    ஒளிர்விடும் சுடர்நான்
    காலடி எங்கும் தனிமை
    இருளை சுமந்திருக்கிறேன் ....அருமை அருமை.!எனக்குப்பிடித்திருக்கிறது.

    ReplyDelete