Tuesday 12 June 2012

மனிதர்களில் மட்டுமென்று ................


சட்டைக்குள் சில்மிசம் செய்த_ என்
கிராமத்துக்காற்றே,
ஆலமர மடத்தில் _உன்
ஸ்பரிசம் தந்த சுகமும்
விளையாடிக்களைத்த
மம்மல்போழுதில் வந்தெனை
ஆரத்தழுவி வியர்வைதுடைத்தளித்த
பரவசமும் _ இன்று
நினைவுகளில் மட்டுமே !
எல்லைகளில் உயர்ந்த
பனைகளோடுஉரசி சிரித்தவள் நீ ,
முல்லையின் வாசத்தோடு
முற்றத்து மண் அள்ளிக்கொட்டி
ஆக்கினைசெய்தவள் நீ ,
நெற்கொழுவில் நெற்கதிகளோடுசல்லாபித்து
நெஞ்சைத் தொட்டவள் நீ ,
ஏகாந்த இராத்திரியில்
மஞ்சம் வந்து _கன்னம்
கொஞ்சிப்போனவள் நீ ,












கிராமத்துப்பூங்கற்றே
வேலிக்கிழுவையும்ஆடுதண்டுப்பூவரசும்_உன்
தரவுகளின்ஆமொதிப்பர்களாக
இ(த)லையாட்டிக்கொண்டிருக்கும் வரை
மாற்றமில்லாமல் நீ வந்து போவாய் .
எனக்குத்தெரியும் _மாற்றங்கள்
மனிதர்களில் மட்டுமென்று ................


No comments:

Post a Comment