Saturday 30 June 2012

காலங்கள் கடக்கும் ஓலி....................



கொண்டாடப்படட்டுமென்று
கொண்டுவரவில்லை
திண்டாடித்துண்டாடி
தீந்தமிழ் வார்த்தைகளை

அன்றாடத்தமிழ் _இது
அழகியல் நின்றாடுமென் வளவுத்தமிழ்.

படிமங்கள் பூட்டி தேரிழுத்தால்
படித்தவன் ஆலாத்தி எடுப்பான்.
எதுகைமோனையென்று எடுத்தெறிந்தால்
அதுக்குள்ள நின்று பிழைபிடிப்பான்.

உருவேத்தி உவமையெல்லாம்
தரவேத்தி இலக்கணங்களை ஆங்காங்கே
நிறைவேத்திப்பாட நானென்ன,
செருப்போட வயலுக்குபோகும்
பொறுப்பில்லா தோட்டக்காரனா?

பல்லுத்தடக்கும் சொல்லெடுத்து
பலருக்கு விளங்காபொருளெடுத்து
நெல்லுக்க நிக்கிற புல்லுப்போல
நாலுவார்த்தை நயமாய்போட்டு
மல்லுக்கட்ட இதுவொன்றும்
மயில் கழுத்துவண்ணமில்ல,
வில்லுக்கேற்ற அம்பிது_கற்ற
கல்விக்கேற்ற கவியிது !

வரங்கொடுத்த சிவனே
வதைபட்டான் _எனக்கு
தமிழ் கற்றுக்கொடுத்தவரே
தளரலாமோ ?
தலை குனியலாமோ?
மருந்தடிச்சு வளத்தபயிர்
மலராதாது பயிரின் பொறுப்பு
பிரம்பாலடிச்சும் படிக்காதது _இந்த
பிரமசத்தியின் கொழுப்பு.

வேசங்களுள் ஒளிந்துகொள்ள
சாத்திரசடங்குகளில் ஆழ்ந்துபோக
ஆத்திரஅவசரத்துக்கு திட்டிக்கொள்ள
பண்டபாத்திரங்களை காலாலடிக்க என
எல்லாம் கற்றுதேறி செய்துமுடித்து,

நான் நானாகவே இருந்து
எனக்காகவென்றில்லாமல் இருந்து
எதுக்காகவும் இல்லாதிருந்து

எவர் எப்படிச்சொன்னாலும்
என் இருப்பு நிரந்தரமானது !!




No comments:

Post a Comment