Tuesday 19 March 2013

இனி விரைவில் விடியும்!!!

என் தேசப்பெருநிலமெங்கும்
குவிந்து கிடக்கும்
வெண் சாம்பல் மேடுகள்
புன்னகைக்கின்றன.......
தோழர்களே நன்றி.


காலநீட்சியின் கனவுகள் சுமந்த  வாழ்தலை
ஈழமீட்சிக்காய் உதிர்த்துவிட
துணிந்த வீரம் கண்டு,
உமிழ முடியாத
பெருவெப்பம் சுமந்து உறங்குமவர்கள்
விழிகள் பனிக்கின்றன............
உங்களுக்காக............

தொண்டைமான் நீரேரியும்
வழுக்கியாறும் -அழகிய
சப்ததீவுக்கூட்டங்களும்
தசாப்த உறக்கம் கலைத்து நோக்குகின்றன,
சோழமண்டல உறவுகளே
உங்களின் எழுச்சியை,

வல்லைமுள்ளி வெளிகளுக்கும்
பகைபணிந்த ஆனையிறவுக்கும்,
வலசைவரும் ஆயிரமாயிரம் பறவைகளிடம்
வாழ்த்துக்களை பகிர்கின்றனர்
கண்களால் எம்மவர்கள் -அவை
நாளையாவது உங்களிடம் வரும்
என்ற நம்பிக்கையில்.

கருக்கொண்ட மேகங்கள்
எழத்தொடங்கிவிட்டன-இனியவை
கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்றுகூடும்,
பெருமின்னல் வெட்டும்,
ஆழியை சுமந்துவந்து கொட்டும்
ஒரு பெரும் குளிர்காற்று.

எல்லாளனும்
பண்டாரவன்னியனும்
நந்திக்கடல் நாயகர்களும்
சுமந்த வெப்பம் இனி
மெல்ல மெல்ல குறையும்.
ஈழத்தின் பெரும் தீ பரவும்
உங்களின் வடிவில்,
விரைவில் எமக்கும் விடியும்!!!

3 comments:

  1. ///கருக்கொண்ட மேகங்கள்
    எழத்தொடங்கிவிட்டன-இனியவை
    கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்றுகூடும்,
    பெருமின்னல் வெட்டும்,
    ஆழியை சுமந்துவந்து கொட்டும்
    ஒரு பெரும் குளிர்காற்று.///
    அற்புதமான வடிப்பு.

    ReplyDelete
  2. வீறு கொண்ட வரிகள்...

    விரைவில் நல்லது விடியும்...

    ReplyDelete
  3. ம்ம் கவிதையில் உணர்ச்சிப்பிழம்பைப் பார்க்கின்றேன்.

    ReplyDelete