Tuesday 26 March 2013

என் சுயத்தின் வழியே...............

அவசரப்படும் மனிதர்கள் 
அடைக்கப்படும் முன்கதவுகள் 
அடங்கி கூடடையும் பறவைகள்
அமைதியாகிப்போகும் தெருக்கள் - என 
அந்திகள் அழைத்துவருவன 
அந்நியமானவொன்றாகவே போய்விடுகின்றன,

நழுவிச்செல்லும் கதிர்களும் 
மினுங்கத்தொடங்கும் நட்சத்திரங்களும் 
ஒடுங்கிப்போகும் ஓரிரு பூமரங்களும்
அந்தரத்தில் எழுந்தலையும் ஒளிப்புள்ளிகளும்
புதர்களின் அரவங்களும்- இந்த 
அந்திகளை கோரமாக்கிவிடுகின்றன.

இந்த,
அந்திகள் இருளை மட்டும்
சுமந்து வருவதில்லை
பகல் பற்றிய பெருமூச்ச்சுக்களையும்
பயம் நீங்காத சில  இரவுகளையும் கூட
அழைத்து வந்து விடுகின்றன,

அநாயாசமாய்
அந்திகளை அனுபவித்து வரவேற்கின்றன
அரவங்களும் ஆந்தைகளும்
புதிரான சில மனிதர்களும். 

என்னவோ தெரியவில்லை........... 
இன்னும்,
அந்திகள் வருவது 
அடுத்த விடியலுக்கு தான்- என்ற 
உணர்வுகள் ஏற்படவே இல்லை!!!

4 comments:

  1. அருமையான நியம். வாழ்த்துக்கள் தம்பி.

    ReplyDelete
  2. அருமையான நியம். வாழ்த்துக்கள் தம்பி.

    ReplyDelete
  3. எதிர்ப்பார்க்காமல் இருக்க வேண்டியது தான்...

    ReplyDelete
  4. விடியல் விரைவில் வந்துவிடும் தோழா

    ReplyDelete