புற்றில் நுழையும் பாம்புபோல
மென்மையாக இறங்குகிறாய்
இரைதேடியோ அன்றில்
உறைவிடம் நாடியோ ?
இழக்காத
அந்தரங்கவேர்கள் மீதும் சொல்லெறிகிறாய்
இடம்மாற்றவோ அன்றில்
பிரட்டிப்போடவோ ?
மௌனங்களை வென்றுபோக
சலனமில்லாத விழிச்சுழற்சியை அனுப்புகிறாய்...
என்னை கொள்ளவா
கொல்லவா?
எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ..
அதற்குமுன்
வா ..
இந்த குளிரைப்போக்க ஒரு தேநீர் அருந்தலாம்..
பின்பொரு முத்தத்தை பகிரலாம்.
மென்மையாக இறங்குகிறாய்
இரைதேடியோ அன்றில்
உறைவிடம் நாடியோ ?
இழக்காத
அந்தரங்கவேர்கள் மீதும் சொல்லெறிகிறாய்
இடம்மாற்றவோ அன்றில்
பிரட்டிப்போடவோ ?
மௌனங்களை வென்றுபோக
சலனமில்லாத விழிச்சுழற்சியை அனுப்புகிறாய்...
என்னை கொள்ளவா
கொல்லவா?
எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ..
அதற்குமுன்
வா ..
இந்த குளிரைப்போக்க ஒரு தேநீர் அருந்தலாம்..
பின்பொரு முத்தத்தை பகிரலாம்.
இனிய வணக்கம் தம்பி,
ReplyDeleteநடப்பின் நவில்தலும்
அதற்கான வேறொரு காரணமும்
நிகழ்வுகளின் சாரமாக அமைந்திருக்கும்
அக்கருவினை மிக அழகாக
கைகொண்டு இனிய கவிதை ஆக்கம்.
வாழ்த்துக்கள்.
ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...