Sunday 15 July 2012

காலத்தின் மீதான காத்திருப்பு


சூனியபரப்பில் சிறகுவிரித்து 
இரைதேடிக்கொண்டிருக்கிறது 
மனப்பறவை !!

இளைப்பாறலுக்கான மரத்தில் 
இலைகளில்லாமல்,
கூடுகளில் சிதைந்துபோன 
குஞ்சுகளின் எச்சங்களும்
என்றோ கட்டப்பட்ட இளங்கொடி பொதிகளும்,

அனாமதேய குரல்களின்
ஒலிப்புகள் எரிச்சலூட்டினாலும்,
துனையிருப்பின் ஆறுதலை
தூண்டுகிறது உள்ளுக்குள்.

அமைதிப்பிரவாகத்துள் மூச்சுக்கான
சப்தம் மட்டும் மெல்லிதாக ............
அச்சத்துடன் அலைகிறது
இருதயத்துடிப்பொலி காற்றில் ..........

உண(ர்)வுக்கான
தனக்கான உண(ர்)வுக்கான 
பறத்தலை  நியதியாக்கி,
இருப்புக்காக
தனக்கான இருப்புக்காக
போராட்டத்தை  வழமையாக்கி
காத்திருக்கிறது இளைப்பாற்றலிலும்.

தூரத்தில் மிகதூரத்தில்
பிரசவ வேதனையோடு
ஒரு கரியமேகம்...........


செத்துக்கொண்டிருக்கும் 
செஞ்சூரியன் கடைசி கதிர்களால் 
தடவிச்செல்கிறது தினமும் ...........!!!





No comments:

Post a Comment