இடைவெளிகள் நிரப்ப
படையலாகின்ற வரிகள் இவை !
நடை பயிலும் பொன்மயிலே _இந்த
கடைவிரிப்புக்கொரு பதில் கொடு !!
கலைகின்ற போதில்
உதிர்கின்ற பாக்கள் இவை
கலைமானே -இங்கு
கொஞ்சம் கவனி
தூண்டியதுன் விழிகள் தான் _எனை
வாட்டியதும் உன்விழிகள் தான்
காட்டியதுன் மொழிகள் தான் _ஆசை
ஊட்டியதும் உன் மொழிகள்தான்
அலைவித்ததுன் அசைவுகள்தான் _உயிர்
கலைவித்ததுமுன் அசைவுகள்தான்
சித்தத்துள் நிதம்
சித்துக்கள் செய்யும்
சித்திரப்பாவையே_இந்த
கத்திப்பார்வை நிறுத்து.
கருத்துள் காதல்
குருத்துக்களை உ(க)ருவாக்கிய,
திருமகளே _இங்கு
கொஞ்சம் திரும்பு.
வேண்டலில்லையாதலால்_எதுவும்
கிடைத்தலில்லை,
தயக்கம் கொள்வதால் _என்றும்
வெற்றி கொள்வதுமில்லை,
இதுவொன்றும் ஒருவழிப்பாதையில்லை.
ஆதலால் கண்ணே,
விலங்குடைத்து
திருவாய் மொழிகள் பகர் .
நன்றி
தினக்குரல் 2007மார்கழி 09
No comments:
Post a Comment