ஆதாளபாதளமொன்றின் இருளுக்குள்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
வாழ்வியலின் தொன்மம்
சுவாசக்காற்று தேடி.....
மௌனத்தின் அலறல்கள்
ஊழிக்கால ஒத்திகையாய்
மெல்லமேலெல_அது
யாருக்கும் தென்படாத
ஆழிக்கண்ணியின் வர்ணனைகளாய்
பேசுபொருளாகிறது !!
சாத்தியமில்லாத கற்பித்தலால்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
வாழ்வியலின் தொன்மம்
சுவாசக்காற்று தேடி.....
மௌனத்தின் அலறல்கள்
ஊழிக்கால ஒத்திகையாய்
மெல்லமேலெல_அது
யாருக்கும் தென்படாத
ஆழிக்கண்ணியின் வர்ணனைகளாய்
பேசுபொருளாகிறது !!
சாத்தியமில்லாத கற்பித்தலால்
வாழ்வியல் இரகசியத்தை
ஒப்புவிக்கிறார்கள் திகம்பரதேச சம்சாரிகள்.
நிசப்தமிழந்த மனவெளியில்
காலப்புரவி கடந்த காலடிகளும்
கிளறிச்சென்ற புழுதிகளும்
ஒப்புவிப்புக்களையெல்லாம்
ஓரங்கட்டி நிலைத்திருக்கின்றன வடுக்களாக,
நாளைதாண்டிய நாளையொன்றில்
தொன்மத்தின் அர்த்தரேகைகள்
புரிபடக்கூடும்_இருந்தாலும்,
இன்றையை தோல்வியாகிக்கொள்வதில்
அமைதியாகி விடப்போவதில்லை!!!!!
நிம்மதி தேடும் மனநிலையில் ஒரு கவிதை.மனம் புலம்புகிறது !
ReplyDeleteஉங்களின் விமர்சனங்கள் எனை இன்னும் புடம் போடும்
Deleteமனம் திறந்து விமர்சியுங்கள் .......
நன்றி அக்கா வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும்.
உங்களின் விமர்சனங்கள் எனை இன்னும் புடம் போடும்
Deleteமனம் திறந்து விமர்சியுங்கள் .......
நன்றி அக்கா வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும்.
ஃஃஃசாத்தியமில்லாத கற்பித்தலால்
ReplyDeleteவாழ்வியல் இரகசியத்தை
ஒப்புவிக்கிறார்கள் ஃஃஃஃ
உண்மையில் எவராலும் முடியாத ஒன்று அவர்களாக உணர்ந்தாலே புரியக் கூடியது...
சிலவேளை உணர்ந்தால் வாழ்க்கை எப்படியாகுமோ ?
Deleteபயமாயும் இருக்கு நண்பனே .............
நன்றி மதிசுதா கருத்துப்பகிர்வுக்கு .
உண்மையில் தங்கள் சிந்தனைச் செறிவும்
ReplyDeleteசொற்களைப் பயன்படுத்தும் லாவகமும் என்ன்னைப்
பிரமிக்கச் செய்து போகிறது
நீங்கள் அதிகமும் எழுத வேண்டும்
அது அதிகப் பேரிடம் சென்று அடையவும் வேண்டும்
அதற்கு குறைந்த பட்சம் வாரம் இரண்டு படைப்புகளாவது
தரவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டும்
குறைந்தது நாள் ஒன்றுக்கு ஐந்து பதிவுகளாவது சென்று
படித்து பின்னுட்டமிடவேண்டும் என உறுதியும்
எடுத்துக் கொண்டால் போதும்
நிச்சய்ம தங்கள் திறன்
மென்மேலும் பளிச்சிடும்
பதிவுலகில் நிச்சயம் நீங்கள் சாதிப்பீர்கள்
வாழ்த்துக்களுடன்...
மிக அதிகமான சுமையொன்றை தந்துள்ளீர்கள் ஐயா,உண்மையில் புலம்பெயர்ந்தபின்,எழுத்துக்களும் வாசிப்புக்களும் மிக அதிகமாக குறைந்து போயுள்ளதை கவலையோடு தான் அனுகிக்கொண்டிருக்கிறேன்.நேர பங்கீடுகள்,வேலைசுமைகள் அழுத்தங்கள் என ..................
Deleteநன்றி ஐயா உங்களின் கருத்துக்கள் எனை இன்னும் இன்னும் இருக்கதூண்டுகிறது .............எழுத்துலகில் பதுவுலகில்
நிச்சயமாக கவனத்தில் கொள்கிறேன் ...........அன்புடன்