விலக்கப்பட அந்த தெருவின் ஓரத்தில்
கழிப்புகளும் பழைய துணிகளும்
சருகாய் சிலபூவின் வடுக்களும்
சிதைந்தும் புதைந்தும் கிடந்தன
ஏதேதோ சடங்குகளின் அடையாளமாய் ...........
தெருவின் மையத்தில்,
நேர்த்தியாக ஆழமாக பதிந்திருந்தது
யாரோ ஒரு மனிதனின் காலடி.
யாராயிருக்கும் ........................
விலக்கப்பட இந்த தெருவினூடாக
எதற்காக பயணித்திருப்பான்?
எருக்கலையும் நாயுருவியும் மண்டிக்கிடக்கும்
தெருமுடிவில் என்ன முடிவெடுத்திருப்பான் ?
கால்நடைகள் மேயாத,
காலடிகள் படாத அந்த சூனியவெளியை,
சூழ்ந்திருக்கும் வெம்மையை,
கடந்துபோகும் பறவைகளை,
அனுபவித்திருப்பானா_அன்றில்
சடுதியான தன் முடிவை எட்டியிருப்பானா?
நிதானமான அவன் காலடி
மதுவேதும் அருந்தியிருக்காததையும்
உறுதியான மனதினையும் உணர்த்தியது.
என்ன செய்துகொண்டிருப்பான் ............
இருள் மெல்லியதாய் இறங்கிக்கொண்டிருந்தது.
மருண்டெழுந்த பூச்சிகளின் கூச்சல்
மனதை நெருடியது ...........
அதிர்ந்த மனதுடன்,
திரும்பி நடக்கத்தொடங்கினேன்
என் காலடிகளை நானே அழித்துக்கொண்டு.
http://mattaioorukai.blogspot.com/2012/09/blog-post.html
ReplyDeleteசுவாமி
இதையும் படிங்க..