அணிசெய்தன அணிகலன்கள்
கூந்தலில் குடியேறி
வீரம்பேசி எழுந்த சூரியன்
அணியாதவைகள் கோணிக்கிடந்தன_உனக்கு
பணிசெய்திட பருவக்காற்றுக்களும்
பாதையெங்கும் தவமிருந்தன
கூந்தலில் குடியேறி
குலவையிட்டது மல்லிப்பூ _அங்கே
செந்தணலில் விழுந்ததாய்
நொந்துபோனது ரோஜாபூ
வீரம்பேசி எழுந்த சூரியன்
வீழும்வரை வெம்மை கொண்டது _தன்
ஓர்மம் குலைந்து ஒளியடக்கி
ஓடி ஒளிந்தது மருகி.
மோகினி நீ மோகித்தவன் நான்
மோகித்தல் மோகத்தால் அல்ல
வாகினியுன் தேகவாகத்தால் அல்ல
வான்மழையால் சுகமடைவது வானல்ல!!
நெருக்கங்கள் நெகிழ்வுகள்
நமக்குள் வேண்டாம் ஏந்திழையே,
தெருக்கூத்தாகிட இதுவொன்றும்
தற்கால தாராளமயமாக்கலில்லை.
நெஞ்சில் இருத்தி ஒரு நேசம்
நெஞ்சுருக்கும் ஒருபார்வை
அஞ்சுகமே, அதுபோதும் _என்காதல்
அந்திமம் இன்றிநிலைக்க அதுபோதும்
This comment has been removed by the author.
ReplyDeleteபுதுக்கவியில் புதிய "மரபு"
Deleteநன்றி உண்மையில் .இதை ஒரு வகையில் ஊக்குவித்தது நீங்கதான் பாஸ் .......
Deleteநெஞ்சில் இருத்தி ஒரு நேசம்
ReplyDeleteநெஞ்சுருக்கும் ஒருபார்வை
அஞ்சுகமே, அதுபோதும் _என்காதல்
அந்திமம் இன்றிநிலைக்க அதுபோதும்
மிகவே கவர்ந்த வரிகள் இவை.வாழ்த்துக்கள் சொந்தமே!எல்லாம் உங்களுக்கு சவக்கடுவத கண்டு பூரிக்கிறேன் சொந்தமே!வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி .
Deleteயார் அந்த அஞ்சுகம், ஒரு கவிதையின் பிறப்பு திறமையால் மட்டுமல்ல அநுபவத்தாலும் தான் பிறக்கிறது.
ReplyDeleteமிகவும் அருமை, தம்பி தட்டச்சு செய்யும் போது பிழைகள் ஏற்படும், அவற்றை சரி பார்த்து சேர்ப்பது நல்லது,
நோந்து-நொந்து ,தராளமயமாக்கலில்லை- தாராளமயமாக்கலில்லை
நன்றி அக்கா,நிச்சயமாக இனி கவனித்தே பதிவேற்றுவேன்.நன்றி அக்கா.
Deleteநல்லா சொன்னிங்க அனுபவத்தால் என்று ..............
இருந்தா உங்களுக்கு சொல்லாமலா இருப்பன்.
நன்றி அக்கா வரவுக்கும் கருத்திடலுக்கும்
This comment has been removed by the author.
ReplyDelete