சருகுகளை எரிக்காதீர்கள்
பாவம் நாளைய குழந்தைக்கான
மின்மினிப்பூச்சிகள்.
கலப்பை கீறிய நிலங்களில்
முளைக்கின்றன எலும்புக்கள்
ஈழதேசம்.
மாலை யாகியதால்
கசங்கியது மலர்
பிணத்தின் மேல்.
பசியாறும் பந்தியில்
பரபரத்தது மனது
வளையல் ஓசை
தலையாட்டின மகிழ்ச்சியில்
ஏணைக்குள் குழந்தை
பருவத்துக்கு வரும்
பறவைகள் பறப்பதில்லை
மனதை விட்டு.
வேம்போ நுணாவோ
குரலில் பிசிறில்லை குயில்.
நான்.
இறந்த நண்பர்களுக்கு அஞ்சலி
உதிர்த்தியது காற்று.
பூக்களை
எனக்கு பிடித்த மாதிரியே குட்டி குட்டியான கவிதைகள்.
ReplyDeleteகலப்பை கீறிய நிலங்களில்
முளைக்கின்றன எலும்புக்கள்
ஈழதேசம்////
ஒரு நீண்ட வரலாற்றை இரண்டே வரிகளில்
அற்புதமாய் சொல்லி விட்டீர்கள்.
நன்றி கலைவிழி.
Deleteஉங்களின் கருத்தாடல்கள் என் வளர்வின் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. வலிகளின் விளைவுகள் அவை
நன்றி வரவுக்கும் கருத்திடலுக்கும்
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான துளிப்பாக்கள்.
நன்றி அருணா செல்வம்.
Deleteஉங்களின் வாழ்த்துக்காளால் இன்னும் என் இருப்பினை தக்கவைக்கும் துணிவு பிறக்கிறது
உங்களுக்கு அருமையாக ஹைக்கூ வருகின்றது தொடருங்கள்..!
ReplyDeleteஅண்ணர் முதலில் மரியாதையாக பேசவேண்டாம்.இந்த பதிவுலகத்துக்கு வர காரணமே நீங்கதான்.
Deleteஉங்களின் ஆதரவோடு தொடர்கிறேன் இடைக்கிடை வந்து விமர்சியுங்கள் நன்றி அண்ணர்
கவிதைக்கேற்ற படமா...?
ReplyDeleteபடங்களுக்கேற்ற கவிதையா...?
அதை சொல்லுங்க முதல்லே... அருமை...
வாழ்த்துக்கள்... நன்றி...
எழுதிப்போட்டு தேடியதும் உண்டு.
Deleteபடத்தை பார்த்த பின் எழுதியதும் உண்டு.
நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன்.
சூப்பர் ஹைக்கூக்கள் நண்பா....
ReplyDeleteஒவ்வொன்றும் அழகு
அதிலும் ஈழதேசம் வலிக்குது
நன்றி நண்பனே,
Deleteவலிகளை சுமந்து இறக்கிவைக்கும் வழியில்லாமல் அலையும் நிலையில் தானே எல்லோரும்.
நன்றி நண்பனே வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்
வேர்கள் பரப்பி நிற்பது நேற்கொலு ஆலமரம் மட்டுமில்லை, நேற்கொலு தாசனும் தான். குறும்பா விரிக்குது கருத்துக்கிளைகளை... வாழ்த்துக்கள் நண்பா..
ReplyDeleteஅந்த விழுதுகளில் உறங்கிய இனிமையை தருகிறது உங்களின் கருத்திடல்.
Delete(விழுதால அடிச்சமாதிரியும் இருக்கு)
நன்றி நண்பனே ...
நிஜமாலுமே ரசித்தேன் உங்களின் ஹைக்கூ கவிதைகளை..
ReplyDeleteநன்றி.வரவுக்கும் கருத்திடலுக்கும்.உங்களின் வரவுகளால் என் இருத்தல் இன்னும் நேசிக்கப்படுகிறது.நன்றி உறவே
Deleteஎனக்கும் மிகவும் பிடித்த துளிப்பாக்கள்.
ReplyDeleteநன்றி உறவே, உங்களின் கருத்துக்கள் என் இருத்தலை இன்னும் நேசிக்க செய்கிறது.
Deleteவார்த்தைகளல்ல கண்ணீர்ன் கண்ணாடிகள்(கலப்பை கீறிய நிலங்கள்...).
ReplyDeleteஐயா மிகவும் நன்றி.எங்களின் தேசம் விதைகளை சுமந்திருக்கிறது ஒருநாள் முகிழ்க்கும் நன்றி ஐயா வரவுக்கு
Delete