Sunday 26 January 2014

அரிதாரம் பூசிய விலங்குகள்.


மடிகளை உள்ளிழுத்த மாடுகள்
காலவெற்றிடத்தில்  உறுமத் தொடங்கி
நாணயக்கயிற்றுக்குள் வளைந்து
உடல் சிலுப்பி நிலம் விறாண்டி
மூச்செறியவும் செய்தன..

புளுதிகளையும் மூச்செறியும் கனதியையும்
வலியேதுமில்லாமல் வழிந்த
வீணீர்களையும்  முகர்ந்த உண்ணிகள்
தாமும் கூட உறுமமுயன்று
உருத்திரதாண்டவமாடின...

எரிந்து கிடக்கும் நிலத்தின்
எச்சங்களை தின்றும்,
உறைந்துபோன மனங்களின்
மர்மங்களை கொன்றும்,
ஈரமிழந்த வேர்களிலா
லும் உயிர்ப்பை சுமக்கும்
புனிதர்கள் தோள்கள் மீதேறியும்,

இன்னலற்ற சுவரோரம்
முதுகு தேய்த்து உண்ணவும் உறங்கவும்
ஆகுதிகளை வைத்து அவிபாகம் பெறவும்
மடிகளை மறைத்து
உறுமத்தொடங்கின கறவைமாடுகள்..

மேச்சல்நிலம் கொண்ட
மாடுகளின் ஏவறைகளுக்கும்
ஓய்வுநேர அசைபோடலுக்கும்
அர்த்தமாயிரம்  கற்பித்துக்கொண்ட
கூடுதொலைத்த குருவிகளின் கூட்டமொன்று
பின்னாவர்த்தனம் பாடத்தொடங்கின..

மடிமறைத்த மாடுகளின் உறுமலும்
உண்ணிகளின் தாண்டவமும்
பூகோள திசைகளில் எதிரொலிக்க,
காடுகளிலும் கூடுகளிலும்
சிரித்துக்கொண்டன
உறுமி மௌனித்துப்போனவைகள்...

No comments:

Post a Comment