Sunday 19 January 2014

யாரிடமிருக்கிறது...

அதிக பட்ச தேவை
ஒரு புன்னகை
யாரிடமிருக்கிறது..
விடை அல்லது கேள்வி
இவற்றை விடுத்து....

விரல்களால் வழிகிறது 
கால துயரத்தின் நீட்சி 
கொடுங்கள். 
நிர்வாணத்தின் மறைப்புக்களை 
களையும் அந்த புன்னகையை.

கேட்பதற்கான தகுதி என்னிடமிருக்கிறது.

என்னிடமிருப்பது 
ஒரு நாற்காலி 
ஒரு மேசை 
கொஞ்ச புத்தகங்கள் 
நிறைய வெற்றிடத்தோடு  மனதும்.

2 comments:

  1. வணக்கம்
    நீங்கள் சொல்வது உண்மைதான் ...
    ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்தில் நிரப்ப படாத வெற்றிடங்கள் அதிகம்...உள்ளது.. எப்போது நிரப்ப படும் என்ற ஏக்கம்... தொடர்கிறது.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நாம் தான் நிரப்பிக் கொள்ள வேண்டும்....

    ReplyDelete