Friday 31 October 2014

க விதை

உதட்டில் வழுக்கியதைக் கூட்டி
விரல்களில் ஏந்திக்
காற்றில் மிதந்ததில்  ஏத்தினேன்.

மிதந்தது  சுமந்ததன்
நிறைவேறாத கனவோடு
புணரமுயன்றதில்  உருமாறிக்கொண்டது.

Saturday 25 October 2014

நினைவில் வை...

காற்றினிலேயே 
மகரந்த தூதனுப்பி விட்டு 
மோகனவேலி கட்டி 
இளமையை காவல் செய்கிறாயே
முட்டாள் தான் நீ 

வண்டினை விரட்டிவிட்டு 
தேனினை என்ன செய்யப்போகிறாய்?

வாசலில் செருப்பினை வைத்துவிட்டு 
ஆட்களில்லை என்று எழுதி வைப்பது போல...

வெட்டிவிட முடியாத 
மனவிரல்கள் நீள்கின்றன 
என்ன செய்யப்போகிறாய்...

தாழிடப்பட்ட கதவுகள்

ஒற்றை சொற்களாய் உதிர்த்து
வானத்தை நிரப்பிய பின்,

உன்
துயரம் தோய்ந்த நாக்கு
என் தனிமையை தின்னத்தொடங்குகிறது.

இரவின் நீட்சியும்
வியர்வை நாற்றமும்
பிசுபிசுப்பின் அந்தரிப்பும்
மோகனத் தவம் கலைக்காமல்
சாய்ந்தெழும் பெருமூச்சும்
அவசத்துடன் பகிரப்படுகையில்

Tuesday 21 October 2014

இரவைத் தின்னும் நிலவு

நட்சத்திரங்கள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள்
காற்றினை நடுக்கமுற வைத்த இரவொன்றில்
தனிமையின் பயத்தால்
உனைப் பற்றிப்  பேசத்தொடங்குகிறேன்.

பிரிய தோழி,

நீ யன்னல் சீலைகளில் இருந்து இறங்கி
அறியப்படாத வர்ணமொன்றாகி
அறையெங்கும் நிறைகிறாய்.