Saturday 25 October 2014

நினைவில் வை...

காற்றினிலேயே 
மகரந்த தூதனுப்பி விட்டு 
மோகனவேலி கட்டி 
இளமையை காவல் செய்கிறாயே
முட்டாள் தான் நீ 

வண்டினை விரட்டிவிட்டு 
தேனினை என்ன செய்யப்போகிறாய்?

வாசலில் செருப்பினை வைத்துவிட்டு 
ஆட்களில்லை என்று எழுதி வைப்பது போல...

வெட்டிவிட முடியாத 
மனவிரல்கள் நீள்கின்றன 
என்ன செய்யப்போகிறாய்...


என் மனநதிக்கரையினில் 
கர்வங்களை புதைக்க வைத்தவளே..
அந்த சமாதிகளில் அஞ்சலி செலுத்து
மீட்டுவிடக் கூடதல்லவா....

இருள் உன் தாய்வீடு 
வெளிச்சம் என் மரண காலம்..

இருளும் வெளிச்சமும் 
இணைகின்ற பொழுதொன்று 
இருந்துகொண்டே இருக்கும்
நினைவில் வை.. 









No comments:

Post a Comment