Monday 29 December 2014

என்னிருப்பு..

சொற்களிலிருந்து புன்னகைகளைக்  கழற்றி
ஆடைகளோடு கொழுவியபின்,
இறந்துபோன அந்தச் சொற்களால்
எழுதத் தொடங்கினேன்
நாட்குறிப்பை.

நாள் நிறைந்து கொண்டது.



அதுவரை
தங்களுக்குள் சண்டையிட்ட
ஒவ்வொருவருக்குமான புன்னகைகள்
ஒன்றாகி குற்றங்களைப் பட்டியலிடத்தொடங்கின

என்றாவது
கையளித்து தப்பிக்கொள்ள உதவுமென்று
சேமித்த புன்னகைகளை அள்ளிச்சென்று
கழிவறைக்குள்  கொட்டிக் கைகளை கழுவியபின்,

இறந்துபோன சொற்களால்
எழுதப்பட்ட நாட்குறிப்பை
பத்திரப்படுத்திவிட்டு
தற்கொலை செய்யத் தயாராகினேன்.

யாராவது
நாட்குறிப்பில் புன்னகைகளை தேடாதவரை
நான் வாழ்ந்துகொண்டிருப்பேன்.

No comments:

Post a Comment