Monday 29 December 2014

முடியாத இரவு

சுவர்களில் தெறிக்கும்
காமம் தீர்ந்த ஒற்றையொலி
புழுக்களாய் படரத்தொடங்கும்

தீண்டாத இடத்தில் திரளும் விடம்
மெல்லக்கொல்லும் நரகத்தை
தீண்டியும் தணியாப் பெரும் தீ
இரைதேடிப்  பரவும்



நீர்த்துளிகள் பெருகி
அணையுடைக்க தூண்டும்
அரவனைக்காத விரல்களையொதுக்கி
நினைவின் தீண்டலில்  ஆறுதல் கொள்ள துணியும்.

மறுப்பை
குறைந்த பட்ச நிராகரிப்பை
முடிந்தளவு  அவமானப்படுத்தலை
நிர்வாணத்தால் சாதிக்கும்  வன்மத்தோடு
திரும்பிக்கொள்கையில்,
அடிவயிற்றில் திரண்டெழுந்த
முத்தமொன்றை ஒளித்து
வறண்ட  இதழ்களால்
வஞ்சம் தீர்த்த குரூர புன்னகையிலிருந்து
எழுந்து போகிறது கரிய சர்ப்பம்.

தீராத் தாபத்திலிருந்து
எழுகின்ற  மின்மினிப்பூச்சி
வெளிச்செல்ல துணியும்
இனி
சாவித்துவாரத்தின் வழியாக,


No comments:

Post a Comment